செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நீ வருவாய் என.



உன்னை மறக்க மறுக்கின்றது
என் இதயம் ..
உறங்க மறுக்கின்றது
என் விழிகள்...
ஆனால் இப்போதெல்லாம் என் இரவுகள்
கனவுகளில் அல்ல..
கண்ணிரில் கரைந்து போகின்றன

நான் நினைக்கும் போதெல்லாம்
நீ வந்து விடுவாய் என்று நினைத்து
கொண்டுதான் என் நாட்கள்
உருண்டோடிப்போகின்றன..
ஆனாலும் என் உதடுகள் தினம் தினம்
சொல்லிக் கொண்டே இருக்கின்றது..
என் இதயம் கலங்குவதைஉன் இதயம் தாங்காதென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக